K U M U D A M   N E W S
Kumudam Ad

AI

குமரியில் வெள்ளப்பெருக்கு - கடைகளை சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Erode Rains: வெளுத்து வாங்கிய கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் | Kumudam News

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.

கேரளாவில் நடந்த ரயில் விபத்து... 4 தமிழர்கள் பலியான சோகம்

கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களே அலர்ட்.. நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும்... விஜய்யின் அடுத்த பிளான்... நாளை அவசர ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கூவம் ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் சிசு.. படுபாதக செயலை செய்தது யார்..? விசாரணையை துவக்கிய போலீஸ்

சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாசம் வந்தாச்சு... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.