நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; மீண்டும் முடங்கிய மலை ரயில் போக்குவரத்து!
தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
Wayanad Landslide Rescue Operation in Kerala : ''நீங்கள் பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்கி பாலம் கட்டிய வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். நானும் ஒருநாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என்னுடைய நாட்டை காப்பேன். உங்களுக்கு எனது மிகப்பெரிய சல்யூட்'' என்று சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளான்.
கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Heavy Rain Warning in Tamil Nadu : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.