K U M U D A M   N E W S

Tamilnadu

Rock Salt பயன்படுத்துவோர் கவனத்திற்கு... பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை

ராக் சால்ட் பயன்படுத்துவோருக்கு உடலில் அயோடின் குறைபாடு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை.

பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி

வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை கியூ பிரிவு போலீசார் விசாரணை

அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.