K U M U D A M   N E W S
Advertisement

action

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மாஸ் லுக்கில் பாலகிருஷ்ணா!

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!

காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.