K U M U D A M   N E W S

‘கருத்தியலின் அடையாளம் சீதாராம் யெச்சூரி’..முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பெயரளவுக்கு மட்டுமே கடிதம்.. முதலமைச்சரை தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி

மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்... முக்கிய வேண்டுகோள் வைத்த தேவஸ்தானம்

வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

TVK Vijay: ”மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது..” தவெக தோழர்களுக்கு பறந்த 8 கட்டளைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

கோலாகலமாக நடக்க உள்ள முதல் மாநாடு.. கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்