'மகாவிஷ்ணு கைது தவறு’ - வெளிப்படையாக பேசிய எல்.முருகன்!
மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார் 4 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்