K U M U D A M   N E W S

AI

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கு விசாரணை.. நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் உதவாக்கரை என்று சொல்லிவிடுங்கள்... திமுக செய்யும் ஹிட்லர் ஆட்சி.. ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பவள விழா... AI வடிவில் கருணாநிதி... மகிழ்ச்சியில் பூரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.