K U M U D A M   N E W S
Promotional Banner

AI

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காணும் பொங்கல் - மெரினாவில் குவியும் மக்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காணும் பொங்கல் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

கண்ணகி சிலை - பாரதி சாலை ஒருவழிப் பாதையாக செயல்படும்.

அடுத்து வரும் 6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காளைகளின் உடலில் டங்ஸ்டன் எதிர்ப்பு வாசகங்கள்

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – 2 கடைகளில் விரிசல்... பரபரப்பான சென்னை

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அடுத்தடுத்து 2 கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.

கோமியம் மிகப்பெரிய மருந்து.. நோய்களை குணப்படுத்தக்கூடியது- ஐஐடி இயக்குநர் காமகோடி

கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டிலை வீசி பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்

மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது  மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.

திருவள்ளுவர் தினம் - முதலமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பேக்கரி ஊழியர் கைது.

சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.

திமிறி எழும் மாடுகள்... தீரத்துடன் அடக்கும் காளையர்கள்

முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.

பாலமேடு ஜல்லிக்கட்டு –தொடங்கும் முன்னேயே தடியடி நடத்திய போலீசார் 

சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.

மாட்டுப் பொங்கல் - அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.

பாலமேட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஜல்லிக்கட்டு

வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.

காளைகள் மீது பவுடர்… ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்

பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.

சிதற விட்ட காளை - பறந்து ஓடிய வீரர்கள்

திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.