3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan
வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech
சென்னையில் தொடரும் கனமழையால் தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது
கனமழை காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி சேவைகளும் செல்ல முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு
தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியில் இருந்து 260 கனஅடியாக உயர்வு
வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
சென்னை விமான நிலையம் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்; மற்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக ரத்து
மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் தொடர் கனமழை காரணமாக வரத்து குறைவால் காய்கறி தட்டுப்பாடு
ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்து அறிந்துகொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்
நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்