K U M U D A M   N E W S
Kumudam Ad

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினுடன் கைகோர்த்த 3 மாநில முதல்வர்கள்.. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

NITI Aayog Meeting 2024 : ''தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

'டிரம்ப்பை கண்டிப்பாக வீழ்த்துவோம்'.. கமலா ஹாரிஸ் சூளுரை.. பெருகும் ஆதரவு!

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாக கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் மறந்தும் கூட தமிழ்நாடு பெயரை உச்சரிக்காத நிர்மலா சீதாராமன்.. முழுமையாக புறக்கணிப்பு!

CM Stalin on Union Budget 2024 : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 1 மணி நேரம் 27 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். ஆனால் இதில் தமிழ்நாடு குறித்த திட்டங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ், தமிழ்நாடு என்ற பெயரை மறந்தும் கூட அவர் உச்சரிக்கவில்லை.

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : இலவச உணவு வழங்கும் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ராஸ்ட்ராங் மனைவி - ரஞ்சித், அன்புமணி வாழ்த்து

Porkodi Armstrong : ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர்: போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?

இலங்கை தொடருக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. டி20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 50 ஓவர் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகளின் கவனத்துக்கு.. இந்த தென்மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்!

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்' அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.