K U M U D A M   N E W S

IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Pushpa 2 ReleaseDate: மீண்டும் புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மாற்றம்... அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷாக்கிங்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் மாற்றியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay: பெரியார், அம்பேத்கர் நடுவே விஜய் கட் அவுட்... தவெக மாநாட்டில் இதுதான் சம்பவமே!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்

மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நிறைவு... அலுவலர்களை மோதியபடி நுழைந்த ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

"GST வரி விதிப்பு என்பது அடாவடி பொருளாதார கொள்கை.." - Seeman | Kumudam News 24x7

"GST வரி விதிப்பு என்பது அடாவடி பொருளாதார கொள்கை.." - Seeman | Kumudam News 24x7

#JUSTIN: Hogenakkal Water Level Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு | Kumudam News

அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி-ஜின் –பிங் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.

"இதற்காக இந்தியா - சீனா உறவு முக்கியம்..” - சீன அதிபர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் போட்ட பதிவு

பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்ந்து நிகழும் கைது சம்பவத்தால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சி

4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம்... அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Amaran Trailer: “ஆர்மிதான் என் Life..” சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் சரவெடி... வெளியானது அமரன் ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"போரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக மாநாடு.. விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிகட்ட பணிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... குவியும் தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

’எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’.. சோதனையின் போது கூலாக சொன்ன வைத்திலிங்கம்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.