K U M U D A M   N E W S
Kumudam Ad

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கு எதிரானது.. மத்திய அரசை சாடிய அப்பாவு

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்.. மத்திய அரசு அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

'இதை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள்'.. மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்!

''மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு மொய் வைக்கும் காங்., கவனம் பெறும் வித்தியாசமான கண்டன போராட்டம்

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல்  நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

‘இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது' - செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், அவகாசம் கோரிய மத்திய அரசிடம், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

மமதா பானர்ஜி பாதியில் வெளியேறினாரா?.. நடந்தது என்ன? நிதி ஆயோக் தலைவர் விளக்கம்!

Niti Aayog Chairman On Mamata Banerjee : ''பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். கூடுதல் நேரம் பேச விரும்பியபோது என்னை பேச விடாமல் எனது மைக் இணைப்பை துண்டித்தனர்'' என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம்.. தடையை நீக்கிய மத்திய அரசு.. வலுக்கும் எதிர்ப்பு!

Govt Employees Can Join RSS Organization : ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.