K U M U D A M   N E W S

cmstalin

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு

"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 50 இடங்களில் குடிநீர் ATM

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன?.. அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவைக்கு 30 மினி பஸ்கள்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

கோவை மாவட்டத்தில் உள்ள 30 வழித் தடங்களில் 30 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

எனது அறிக்கைகள் முதல்வரை உறுத்துகிறது.. இபிஎஸ் பதிலடி

"கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத் தானம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி.. விவசாயிகள் கைது!

தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் காட்டம்

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''

''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''

தேர்தல் பரப்புரை - முதலமைச்சர் வாழ்த்து

தேர்தல் பரப்புரை - முதலமைச்சர் வாழ்த்து

பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.