K U M U D A M   N E W S

Court

ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

Race Club Case Update: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.

10 வயது சிறுமி வன்கொடுமை.. தேவைப்பட்டால் ரகசிய விசாரணை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Fake NCC Camp : கிருஷ்ணகிரி போலி NCC முகாம்.. “ஜாமின் கொடுக்காதீங்க..” - நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு வாதம்

Fake NCC Camp Issue in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Rajaji Hospital : மதுரை அரசு மருத்துவமனை விபத்து.. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai Rajaji Hospital Accident : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில் சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Water Canel Issue : அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Actress Trisha Case : பக்கத்து வீட்டு சண்ட்டை...பாலீஸா போன த்ரிஷா...எண்ட் கார்டு போட்ட கோர்ட்

Actress Trisha Krishnan Case : மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

”குழந்தை ஆபாச படம் பார்த்தால்....” சென்னை உயர்நீதிமன்றத்துக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..வழக்கின் பின்னணி இதோ!

குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

“குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் Youtube பக்கம் ஹேக்.. உச்சக்கட்ட பதற்றம்!

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்

Nayakaneri Panchayat President : நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

உச்சநீதிமன்றத்தின் Youtube பக்கம் ஹேக்..

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING || விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி

விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி