K U M U D A M   N E W S

மகா கும்பமேளா உயிரிழப்புகள்.. பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில் அந்நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. மோடியுடன் விவாதித்ததாக டிரம்ப் தகவல்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா; மெய்சிலிர்க்க வைத்த ராணுவ ஊர்திகளின் அணிவகுப்பு

அலங்கார ஊர்திகள், ராணுவ அணிவகுப்பு மரியாதை.

76-வது குடியரசு தினம்.. டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் திரௌபதி முர்மு

76-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ரவுடி நாகேந்திரனின் சகோதரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்..  அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக - தேமுதிகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.