K U M U D A M   N E W S

பிறந்தநாளன்று ED அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

எல்லாமே வீடியோ.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.  

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சோகம்.. 20 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

ரோடா..? கடலா..? முடங்கிய முக்கிய சாலை.. மிதக்கும் வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

Rajini: வெங்கட் பிரபுவுடன் இணையும் ரஜினிகாந்த்... விஜய்யின் கோட் படத்தை பாராட்ட இதுதான் காரணமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டாற்று வெள்ளம்.. 'வேண்டாம்' பறந்த முக்கிய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். 

மதுபோதையில் போலீசாரிடம் ரகளை.. தம்பதியினரிடம் போலீசார் விசாரணை

சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு காவலர்களிடம் மதுபோதையில் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.