K U M U D A M   N E W S

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! - தலைவர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

“வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு!” - அண்ணாமலை இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Vellaiyan : வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்.. 2 நாட்கள் கடையடைப்பு

T Vellaiyan Passed Away in Chennai : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்றுக் காரணமாக காலமானார். 2 நாட்கள் கடைகளை அடைத்து துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்