K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சர்ச்சை பேச்சில் சிக்கிய மகா விஷ்ணு விமான நிலையத்தில் கைது.. ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு.. சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

சிலை செய்ய முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் முடிந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பண்ருட்டி அருகே  விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க  சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.