K U M U D A M   N E W S

Durai Dayanidhi : மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!

Durai Dayanidhi Death Threats : கொலை மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் கூடுதலாக ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி விமான சேவை; பயணிகளுக்கு தமிழில் வரவேற்பு!

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து நேற்று (ஆகஸ்ட் 10) முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு விமான நிலைய தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர்.

Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!

Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“இஸ்லாமிய சமுதாயத்தை பாஜக ஒதுக்குகிறது” - விஜய் வசந்த் எம்.பி. தாக்கு

அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.