K U M U D A M   N E W S

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

“கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் பாடல்களின், சுவர் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா எமோஷனலாக பேசியுள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணி... வேறு கருத்து கிடையாது.. ஜோதிமணி எம்.பி. பேச்சு!

Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மருத்துவ பரிசோதனை

நாமக்கல் அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அரசு மருத்துவம்னையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

ஏடிஎம் கொள்ளை... வாகனங்கள் மீது கண்டெய்னர் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

தீரன் பட பாணியில் கொள்ளை.. கர்நாடக போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து வரியை மீண்டும் உயர்த்திய திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

"பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அடித்தது ஜாக்பாட்... 5000 பேருக்கு வேலைவாய்ப்பு... வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.