K U M U D A M   N E W S

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Shobita Dhulipala: “கவித கவித..” குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!

Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோபிதா துலிபலா, நாக சைதன்யா மீதான காதலை குறுந்தொகை பாடலுடன் கவிதையாக தெரிவித்துள்ளார்.

Andhagan BoxOffice Collection: அந்தகன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்... கம்பேக் கொடுத்த பிரசாந்த்

டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.