K U M U D A M   N E W S

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

தோனியின் சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர்.. துலீப் டிராபியில் அபாரம்

துலீப் டிராபி போட்டியின் ஒரு இன்னிங்ஸில், அதிக கேட்சுகள் பிடித்த தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார்.

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளிகளில் நாப்கின் - நீதிமன்றம் அதிருப்தி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

‘என் தந்தைக்கு மனநல கோளாறு’ - தோனி மீதான விமர்சனத்திற்கு பின் யுவராஜ் சிங் வீடியோ வைரல்

மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

'சிங்கிள் எடுங்க மஹாராஜா'.. யுவராஜ் சிங் சொன்னதை கேட்காத பவர் ஹிட்டர்

அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு.. சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

'தோனியை மன்னிக்க மாட்டேன்'.. யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்.. பாயும் ரசிகர்கள்!

''2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை'' என்று யோகராஜ் சிங் கூறியுள்ளார்.