K U M U D A M   N E W S

வெளியே சொல்லமுடியாத வேதனை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் வீட்டின் உள்ளே... ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

சென்னை வளசரவாக்கத்தில் ரக்‌ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவா?- எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதில்

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

MK Stalin in Coimbatore: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.