K U M U D A M   N E W S

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி-ஜின் –பிங் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.

"இதற்காக இந்தியா - சீனா உறவு முக்கியம்..” - சீன அதிபர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் போட்ட பதிவு

பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள்... CMDA அலுவலகத்திலும் சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்திவரும் நிலையில் சி.எம்.டி.ஏ அலுவலத்திலும் சோதனை.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Bangalore Building Collapse Case: தரைமட்டமான 6 மாடி கட்டிடம் உயரும் பலி எண்ணிக்கை

பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து. ஒரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்

வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை

மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

"போரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.