K U M U D A M   N E W S

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்.... முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி... செந்தில் பாலாஜி!

நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.

செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு ஜாமின்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

"செந்தில் பாலாஜி ஜாமின்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" - முத்தரசன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்.. சாதனை படைத்த இந்திய வீரர்கள்

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..

திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை - கேள்விக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு!

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஓயாத குண்டு சத்தம்.. அதிகரிக்கும் பதற்றம்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்!

Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.