K U M U D A M   N E W S

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. போக்குவரத்து பாதிப்பு!

சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

கர்ப்பிணி உட்பட 27 பேருக்கு நடுக்கம் ஏன்? - சீர்காழி அரசு மருத்துவமனை விளக்கம்

சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி - இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம்| Kumudam News | Tirupati | Tripaticrowed |Andraparadesh

திருப்பதி - இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம்| Kumudam News | Tirupati | Tripaticrowed |Andraparadesh

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது

சுதேசி பொருட்களையே வாங்குங்கள்: இந்தியப் பொருளாதாரம் வளரும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!

வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.