4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
Arakkonam Bus Stand Roof Top Collapse : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலைய வளாக மேற்கூரை பூச்சு பெய்ந்து விழுந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் மீண்டும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த வாரம் திரையரங்குகளில் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. இதில், எந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது என இப்போது பார்க்கலாம்.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.