மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்
மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.
மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.
காலை 11 மணி வரை 415 காளைகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 399 காளைகளுக்கு அனுமதி, 16 நிராகரிப்பு.
தங்கள் குடும்பம், உறவினர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.
ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.