K U M U D A M   N E W S

Bullock Cart Race : அரிமளம் மாட்டு வண்டி பந்தயம்; கண்களுக்கு விருந்தளித்த சீறிப்பாயும் மாடுகள்

Arimalam Bullock Cart Race in Sri Sethumel Chella Ayyanar Temple : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

'இதுதான் தமிழ்நாடு'.. வைகோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தம்பிதுரை.. தமிமுன் அன்சாரி பாராட்டு!

''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Kottukkaali: சூரியின் கொட்டுக்காளி எப்படி இருக்கு..? சிவகார்த்திகேயன் முதல் பிரபலங்களின் விமர்சனம்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற கொடுக்காளி படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Kavundampalayam: “ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான்..” கவுண்டம்பாளையம் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!

Actor Ranjith about Honour Killing : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்த்த ரஞ்சித், ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் கோயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடமும் தேமுதிக தொண்டர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

GOAT In EPIQ: கோட் படத்தின் வேற லெவல் அப்டேட்... மிரட்டலாக மாஸ் காட்டும் விஜய் & கோ!

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படம் ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்னொரு தரமான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

Kavundampalayam: “கவுண்டம்பாளையம் ரிலீஸ்... அறிவு முதிர்ச்சி இல்லாம வர வேண்டாம்..” ரஞ்சித் அதிரடி!

Actor Ranjith about Kavundapalayam movie Issue : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் பார்க்க வர வேண்டாம் என ரஞ்சித் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.

உதகையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

அரியலூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்!

அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.

"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு

கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

GOAT In IMAX: ஐமேக்ஸில் வெளியாகும் கோட்... Wow! தெறிக்க விடும் விஜய்யின் புதிய போஸ்டர்!

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்க்கலாம் என அறிவித்துள்ள படக்குழு, விஜய்யின் தெறி மாஸ்ஸான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Aug 9 OTT Release: தாத்தா வர்றாரு... இந்தியன் 2 பார்க்க ரெடியா... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

கமலின் இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளன.

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு... லொக்கேஷனை கன்ஃபார்ம் செய்த தவெக தலைவர் விஜய்!

கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.

ஆள விடுங்கப்பா... சத்தியமா இனி அப்படி நடிக்கவே மாட்டேன்... நமீதா ஓட்டம்!

“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.

வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்

“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

ஆடிப்பூரத்தில் காளியம்மனுக்கு வளைகாப்பு; குழந்தை பாக்கியம் கிட்டும்

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.