K U M U D A M   N E W S

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING || இபிஎஸ்-க்கு கே.என்.நேரு கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தவெக மாநாடு; சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது. 

TVK Vijay: தவெக மாநாடு... பொறுப்பாளர்களை தொடர்ந்து சிறப்புக் குழுக்கள்... விஜய்யின் அடுத்த அதிரடி!

வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து, மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

TVK Vijay: “அதுவே முடியல... ஆனா நேரடியா முதலமைச்சர் போஸ்ட்..” தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் தடம் பதிக்கவுள்ள விஜய்க்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Ajith: புதிய ரேஸ் கார்... கெத்து காட்டும் அஜித்... அந்த சிரிப்பு தான் ஹைலைட்... வைரலாகும் வீடியோ!

அடுத்தடுத்து பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வாங்கி வரும் அஜித், தற்போது புதிய காருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்

தொடர் விடுமுறைக்கு பின்னர் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வடகிழக்கு பருவமழை.. கண்காணிப்பாளர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்

2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vettaiyan Box Office: வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செம!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்களில் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.