K U M U D A M   N E W S

"தாம்பரம் ரயில் நிலையம் வெடிக்கும்.." - ஈர குலையை நடுங்க விட்ட செய்தி

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.

குடும்பமாக பைக்கில் சென்ற நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. துடிதுடித்து பலியான பிஞ்சு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

நண்பர்களுடன் பந்தயம்.. அநியாயமாக பறிபோன உயிர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

கர்நாடகா கோணனகுண்டே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீபாவளியன்று நண்பர்களுடன் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவா?- எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதில்

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.