K U M U D A M   N E W S

TVK Maanadu : அந்த 33 நிபந்தனை.. தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு..? விளக்கம் கொடுத்த எஸ்பி!

TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தவெக மாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் விளக்கம் கொடுத்துள்ளார்.

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

அடடே! திடீர் ட்விஸ்ட்.. கமலா ஹாரிசுக்கு டப் ஃபைட் கொடுக்கும் டிரம்ப்.. கருத்து கணிப்பு முடிவு!

US Presidential Election 2024 : அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்களில் கமலா ஹாரிசை விட டிரம்ப் ஒருபடி மேலே இருப்பதாக நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி (New York Times/Siena College) நடத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன : .

Chennai Rain Update : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சை.. கர்நாடகாவில் இருந்து வந்து இறங்கிய நெய்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

ஜகா கேட்ட இபிஎஸ் ....தடா போட்ட தயாநிதி...Tired ஆன நீதிமன்றம்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.