K U M U D A M   N E W S
Advertisement

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

TVK Maanadu : தவெக மாநாடு... 17 நிபந்தனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்... லிஸ்ட் போட்ட போலீஸார்!

TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வேலூர் சிறையில் பரபரப்பு.. அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"அவரு போலீஸ் இல்ல... வழிப்பறி கொள்ளையன்"பயிரை மேய்ந்த வேலி !

ரேபிடோ ஓட்டுநரின் ஜிபேயில் இருந்த பணத்தை வழிப்பறி செய்த போலீசார்.