K U M U D A M   N E W S
Promotional Banner

Breaking: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி... மேலும் 32 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Vaiko Speech : கிரிக்கெட்டில் தோல்வி.. 4 மீனவர்களின் தலையை வெட்டிய இலங்கை கடற்படை.. கொதித்த வைகோ

Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

Magalir Urimai Thogai Scheme : இந்த 2 திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss : மது வணிகம் “தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி”; அன்புமணி ராமதாஸ் சாடல்

Anbumani Ramadoss Slams Tamil Nadu Govt : “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

Chennai : 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. கடனுக்காக செய்த கொடூரம்..

Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : சென்னை வியாசர்பாடியில் வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தாய் உட்பட ஆறு பேரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

”அடுத்த ஜென்மத்திலும் காவல் உடையை அணிய விரும்புகிறேன்” - கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்

DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony : இன்று தான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்று நினைக்கும் போது கண்கலங்கிறது எனவும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணிய விரும்புகிறேன் எனவும் பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி ஏகே விஸ்வநாதன் உருக்கமாக தெரிவித்தார்.

Priest Karthik Munusamy : 'உயிருக்கு ஆபத்து’ - கோவில் அர்ச்சகர் மீது பெண் தொகுப்பாளினி மீண்டும் பரபரப்பு புகார்

Kalikambal Priest Karthik Munusamy Case : காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியால் உயிருக்கு ஆபத்து எனவும் அர்ச்சகர் பணம், அதிகார பலத்தை பயன்படுத்துவதாகவும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

“பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி..” தவறான கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

Finance Minister Nirmala Sitharaman : தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதுபற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

Minister Ponmudy ED Case : திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

PCOS/ PCOD - தாய்மை அடைவதில் தடையா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

Women Health Tips in Tamil : கர்ப்பப்பை நீர்க்கட்டி (PCOD மற்றும் PCOS) என்றால் என்ன? இந்த பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி? PCOD மற்றும் PCOS பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் கூறும் தீர்வுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி! வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் முன்னணி நிறுவனங்கள்..

IT Employment 2024 : டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

குடும்பத்தினரை சந்தித்து பேசிய ஜாபர் சாதிக்.. வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத் துறை

Jaffar Sadiq Drug Smuggling Case : போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

கல்வித்துறையை குமரகுருபரன் கை கழுவியது ஏன்?.. நிதிச்சுமை காரணமா?...

Kumaragurubaran IAS : 10 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு

Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘அமலாக்க துறையினர் என்னை துன்புறுத்தினார்கள்’ - நீதிபதியிடம் புலம்பிய ஜாபர் சாதிக்

Jaffar Sadiq Drug Smuggling Case : 4 முக்கிய நபர்களின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

182 டெஸ்டுகள்... 22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..?

182 டெஸ்டுகள்...22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... 700 டெஸ்ட் விக்கெட்டுகள்...இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கிரிக்கெட் வீரரின் புள்ளிவிவரங்கள் அல்ல. இன்றைக்கும் ஆர்வத்துடனும் நேர்த்தியுடனும் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள். யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்?

தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.