K U M U D A M   N E W S

mi

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

BREAKING || ஹேமா கமிட்டி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

BREAKING || தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் - விரைவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

LIVE | விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

விஜய் கட்சியால் வாக்குகள் சிதறுமா..? - பிரேமலதா விஜயகாந்த் நச் பதில்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

இது தொழில் தொடங்குவதற்கான பயணம் தானா? பொள்ளாச்சி ஜெயராமன்

இங்கே இருக்கும் தொழில்களுக்கெல்லாம் மின்சார கட்டணத்தில் சலுகை கொடுக்காமல், அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துக்கொண்டிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்

'ஓராண்டில் 116 கோயில்களில் குடமுழுக்கு'.. அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

கடந்த 3 ஆண்டுகளில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,098 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.