K U M U D A M   N E W S

தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பா தோள்ல தாத்தா தோள்ல ஏறி வரல..” - உதயநிதிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை

அப்பா தோள்ல தாத்தா தோள்ல ஏறி வரல..” - உதயநிதிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? ராமதாஸ் சரமாரி கேள்வி!

பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டி பொதுக்குழு.. துரத்தும் துரோகம்.. சீனியர்களுக்கு எடப்பாடி ரெட் அலர்ட் !

அதிமுகவில் ஆளுக்கொரு ஆண்டுவிழா, போட்டி, பொதுக்குழு… சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரெட்அலர்ட்… என்ன நடக்கிறது அதிமுகவில்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

வம்புக்கும் பேசவில்லை, வீம்புக்கும் பேசவில்லை.. பாதுகாப்புக்காக பேசுகிறோம்... திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது.. ஆரியத்தை தூக்கியது யார்? - கொந்தளித்த சீமான்

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்றும் வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

#BREAKING: வாகன விபத்தில் தஞ்சை காவலர் உயிரிழப்பு: ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு | Kumudam News

தஞ்சையில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

‘எங்களை சீண்டாதீர்கள்’ - தவெக தலைவர் விஜய்க்கு சேலம் பாமகவினர் எச்சரிக்கை

35 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாமக கொடி கம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் அபகரித்ததால் பாமக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.