K U M U D A M   N E W S

Murder

Nelson: நெல்சன் மனைவி குறித்த செய்திகளை நீக்க வேண்டும்... சட்டரீதியாக நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சவுதிக்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணன்.. இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸார்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!

''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.