யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்
யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
சென்னை வளசரவாக்கத்தில் ரக்ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
கர்நாடகா கோணனகுண்டே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீபாவளியன்று நண்பர்களுடன் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.