K U M U D A M   N E W S
Kumudam Ad

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கூவம் ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் சிசு.. படுபாதக செயலை செய்தது யார்..? விசாரணையை துவக்கிய போலீஸ்

சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா..? - நீதிமன்றம் உத்தரவவால் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் மாசம் வந்தாச்சு... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு உயிரிழப்பு கூட இல்லை... பருவமழைக்கு நாங்கள் தயார்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"மிக கனமழை" பயமுறுத்தும் கடல்.. "மிஸ் ஆகாது கண்டிப்பா நடக்கும்.."

சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கை கோர்க்கும் Vijay - Thiruma ? - அரசியல் களமே ஆடிப்போக வந்த தகவல்

சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது