K U M U D A M   N E W S
Kumudam Ad

வயநாடு மக்களவை தொகுதி தேர்தல்.. பிரியங்கா காந்தி குடும்பத்துடன் வேட்பு மனு தாக்கல்

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் பிரியங்கா காந்தி. அவருக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எங்களால் இனிமேல் பொறுக்க முடியாது.. தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயநாடு தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா.. பின்னர் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்!

கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

30 அடி ஆழ பள்ளத்தில் புரண்டு கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?

ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் உள்ள கதிரியில் இருந்து புலிவெந்தலாவுக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்

இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்மன் கில், ரிஷப் பண்ட் தயார்.. தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... குவியும் தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.