K U M U D A M   N E W S
Kumudam Ad

#BREAKING : 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு. 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு பகுதியில் போலீசார் தீயிட்டு அழித்தனர்

கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 10 பட்டியலில் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், முதல் 10 இடத்திற்குள் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

மகளிர் படையுடன் தொடங்கியது விசிகவின் மதுவிலக்கு மாநாடு!

விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது

சாம்சங் விவகாரம்... கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன. 

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி

நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். 

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

மருத்துவனையில் சிகிக்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.