K U M U D A M   N E W S
Kumudam Ad

சீசிங் ராஜா என்கவுன்ட்டர்.. சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு

சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.

ஒரே இடத்தில் இவ்ளோ Collection-ஆ.. கார் கண்காட்சியை கண்டு திகைத்து நின்ற இளைஞர்கள்..

சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஒரே இடத்தில் இவ்ளோ Collection-ஆ.. கார் கண்காட்சியை கண்டு திகைத்து நின்ற இளைஞர்கள்..

சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. 100 பேர் பலி.. அதிகரிக்கும் பதற்றம்!

Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

பெயரளவுக்கு மட்டுமே கடிதம்.. முதலமைச்சரை தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி

மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

'தமிழில் பேசாத பிகரை கழட்டி விட்டுருங்க'.. செல்வராகவன் சொல்கிறார்!

Director Selvaraghavan About Girls : ''உலகத்தில் நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் எல்லோரும் அவர்களின் தாய்மொழியில் தான் பேசுவார்கள். அது மட்டும் தான் பேசுவார்கள். அங்கு யாரும் இங்கிலீசில் பேச முயற்சி செய்ய மாட்டார்கள்'' என்று செல்வராகவன் கூறியுள்ளார்.