K U M U D A M   N E W S
Kumudam Ad

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சதத்தை தவற விட்ட ஜடேஜா.. இந்தியா 376 ரன்கள் குவிப்பு.. தடுமாறும் வங்கதேசம்!

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

'அரசியலில் முதல் படி.. எதிரிகள் தவிடுபொடி'.. சமூகவலைத்தளத்தில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100ம் ஆண்டு.. சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

JUST IN | மாஞ்சோலை விவகாரம் – பிபிடிசி நிர்வாகத்திடம் இன்று விசாரணை

நெல்லை மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக பிபிடிசி தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் இன்று விசாரணை. 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறுகிறது

இன்றோடு 100 ஆண்டுகள் கடந்தன.., ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் நன்றி

"சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஜான் மார்ஷல் அறிவித்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆன நிலையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிடத்தின் பங்கு குறித்தும் தெரிவித்திருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி - முதலமைச்சர் X தளத்தில் பதிவு

'இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்’..திடீரென பொங்கிய மோகன் ஜி.. என்ன விஷயம்?

’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.