K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்..4 ஆண்டுகளில் எவ்வளவு? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4,63,710 வழக்குகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளி விவரங்கள் குமுதம் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.