K U M U D A M   N E W S

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

“மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது... சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்” ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

O. Panneerselvam : அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி!

O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Senthil Balaji : "பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Lipstick Issue : கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.