K U M U D A M   N E W S

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Armstrong-ன் விவகாரம் இதோடு முடியாது தொடரும்.. - Journalist Varahi Exclusive Interview

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... திமுக-காங்கிரசுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்... பரபரப்பு ட்வீட்!

''ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்''

அம்பானி இல்ல திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு கெளரவம்... வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.