K U M U D A M   N E W S
Kumudam Ad

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,196 கன அடியில் இருந்து 19,495 கன அடியாக அதிகரிப்பு.

அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.

பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்..! அதிரடி காட்டிய போலீசார்

முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.