K U M U D A M   N E W S
Kumudam Ad

6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... சிபிஐ நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி!

''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.

’பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’.. திமுக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர்.

கோயில் கட்டுமானம்... இடித்து அகற்றம்

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது 

#Breaking || மனோ மகன்கள் மீது பதியப்பட்ட FIR வெளியானது

கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது  தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான FIR வெளியானது  

#BREAKING || மனோ மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓட்டம்?

போலீசாரால் தேடப்பட்டு வரும் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர் 

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?

'' ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்துள்ளார்.

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

#breaking | அமலாக்கத்துறை சோதனை - 4 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் - பள்ளிப்பட்டு அருகே அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக 4 இளைஞர்களைஅமலாக்கத்துறை கைது செய்தது. பணப்பரிவர்த்தனை தொடர்பாக 4 இளைஞர்களிடமும் 19 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்