K U M U D A M   N E W S
Kumudam Ad

#BREAKING : TN Govt Hospital Dean : டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

டி.எஸ்.பி. தலைமுடியை பிடித்து தாக்குதல்.. போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது சலசலப்பு..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.

Moneky Pox Test : குரங்கம்மை அச்சுறுத்தல்; 26,000 பயணிகளுக்கு சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு.. சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி.. ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் ரூ.59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு கிராமத்தையே அலற விடும் 2 ஓநாய்கள்.. 8 பேரை கடித்துக் கொன்றன.. பீதியில் உறைந்த மக்கள்!

இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!

பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.