TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பால் மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.